Monday, May 28, 2012
Tuesday, May 22, 2012
Sunday, May 20, 2012
Saturday, May 19, 2012
Saturday, May 5, 2012
06.05.2012
1 ' உண்மையான திராட்சைச் செடி நானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர்.2என்னிடமுள்ள கனிகொடாத கொடிகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனிதரும் அனைத்துக் கொடிகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்து விடுவார்.3 நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாய் இருக்கிறீர்கள்.4 நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கொடி திராட்சைச் செடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாக கனி தர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனி தர இயலாது.5 நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது.6 என்னோடு இணைந்து இராதவர் கொடியைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார். அக்கொடிகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும்.7 நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்.8 நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது.
தன்னிச்சையாக வளர்கிற திராட்ச்சை செடி சரியாக வளர்வது கிடையாது. அது தனக்குள்ளே வளர்ந்து கனிதராமல் போய்விடும். கனிகொடாத கிளைகள் தறிக்கப்படும். இயேசுவை சார்ந்து உள்ள கிளைகள் (சீடர்கள்) இயேசுவை தெரிந்துள்ள, அன்புசெய்கின்ற சீடர்களோடு இணைந்திருக்கவேண்டும். கனிதருவதற்கு அது ஒன்றுதான் வழி. தனி கிறிஸ்துவம் என்பது மடமை.
Subscribe to:
Posts (Atom)